மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் 727 பயனாளிகளுக்கு ரூ.3.86 கோடி மதிப்பிலான இணைய வழி பட்டாக்களையும், 100 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.1.02 கோடி மதிப்பில் விலையில்லா இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 27KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் 127 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் , அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 29KB)
மேலும் பலகல்வி கடன் மேளா
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2026அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 107 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.40 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 21KB)
மேலும் பலஉலக தாய்மொழி நாள் – உறுதிமொழி
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026அரியலூர் மாவட்டத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது. (PDF 163KB)
மேலும் பலகாசநோய் எதிர்ப்பு வார விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026அரியலூர் மாவட்டத்தில் காசநோய் எதிர்ப்பு அனுசரிப்பு வாரம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 85KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2026மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் (18.02.2026) அன்று நடைபெற்றது. இக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 51KB)
மேலும் பலபுதிய அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையம்
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2026அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் புதிய அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து,மையத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். (PDF 91KB)
மேலும் பலஉயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், பொய்யாதநல்லூர் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 19KB)
மேலும் பலதா.பழூர் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மைய கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல்
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026அரியலூர் மாவட்டத்தில் ரூ.9.19 கோடி மதிப்பீட்டில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மைய கட்டடம் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 21KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 05 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை திறந்து வைத்தார்கள். அரியலூர் ஊராட்சி ஓன்றியம், கடுகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சமுதாய நல மையத்தில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து குத்து விளக்கேற்றி வைத்து, சேவை மையத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 110KB)
மேலும் பல