அரியலூர் பேருந்து நிலையம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026அரியலூர் நகராட்சியில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்(PDF 27KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் செந்துறை புதிய போக்குவரத்து கழக பணிமனையினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026அரியலூர் மாவட்டத்தில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள செந்துறை புதிய போக்குவரத்து கழக பணிமனையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 40KB)
மேலும் பலதமிழ்நாடு – 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி! உங்க கனவ சொல்லுங்க புதுமையான திட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 263KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் சாலைகள் தரம் உயர்த்தும் பணியினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 28KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 25KB)
மேலும் பலகங்கைகொண்ட சோழபுரம் கோவில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2026அரியலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 23KB)
மேலும் பல“திறனகம்” மாவட்ட திறன் மையம்
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் “திறனகம்” மாவட்ட திறன் மையத்தினை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 161KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 02.03.2026 அன்று நடைபெற்றது. (PDF 82KB)
மேலும் பல12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 42KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக துணை மின் நிலையம் மற்றும் பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33/11 KV துணை மின் நிலையம் மற்றும் ரூ.24.08 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார்கள். (PDF 24KB)
மேலும் பல