போட்டித் தேர்வு மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி மையத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025அரியலூர் மாவட்டத்தில் ரூ.19.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போட்டித் தேர்வு மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி மையத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, ரூ.22.30 இலட்சம் மதிப்பீட்டில் நூலகச் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 114KB)
மேலும் பலகலைஞர் கைவினைத் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “கலைஞர் கைவினைத் திட்டத்தினை” தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியின் நேரலை நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டார்.(PDF 180KB)
மேலும் பலமாபெரும் மரம் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2025அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் மரம் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.(PDF 63KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 17.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக உடையார்பாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 25KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 16.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16.04.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 93KB)
மேலும் பலஅண்ணல் அம்பேத்கர் 135-ஆவது பிறந்த நாள் – சமத்துவ நாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் 135-ஆவது பிறந்த நாள் – சமத்துவ நாள் விழாவினை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 962 பயனாளிகளுக்கு ரூ.13.44 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 24KB)
மேலும் பலபெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 34KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025அரியலூர் மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு 203 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 34KB)
மேலும் பலசமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (11.04.2025) அன்று நடைபெற்றது.(PDF 20KB)
மேலும் பலநீர்வளத்துறையின் சார்பில் பாசன ஆதாரங்கள் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025நீர்வளத்துறையின் சார்பில் பாசன ஆதாரங்கள் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் 22 பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 32KB)
மேலும் பல