தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ), 1974-இல் ஆதிதிராவிடர்களுக்கு தீப்பிடிக்கா வீடுகள் கட்டுவதற்காக இந்திய நிறுவனச் சட்டம், 1956-இன் படி நிறுவப்பட்டது, அதனைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக கட்டிடங்கள் தொடர்பான பொறியியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை 1980-81 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள்
- நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் (NMNT)
- முதலமைச்சரின் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM-ARISE)
- பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டம் (PM-AJAY)
- தனிநபர் கடனுதவி திட்டம் (PM-AJAY – Individaul)
- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம்
- துரித மின் இணைப்பு திட்டம்
- திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்
ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின நிலமற்ற விவசாயி குடும்பத்தில் மகளிருக்கு நிலவுடைமை ஏற்படுத்துவது. இத்திட்டத்தில் நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினராகயில்லாத பிற இனத்தைச் சார்ந்தவராகயிருக்கவும். நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை முன் விடுவிப்பு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் முழு விலக்களிப்படும்.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு சமூக பொருளாதார அதிகாரமளித்து வளம் உண்டாக்க பல்வேறு தொழில்கள் மற்றும் புதுமையான தொழில்களுக்கு திட்ட தொகையில் 35 சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.3.50 இலட்சம் வரை முன் விடுவிப்பு மானியமும், வங்கி கடனை சரிவர திருப்பி செலுத்துபவர்களுக்கு 6 சதவீதம் வட்டி பின் விடுவிப்பு மானியமும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள திட்ட மதிப்பீடு ரூ,1.00 இலட்சம் கொண்ட பல்வேறு தொழில்களுக்கு 50% (அ) அதிகபட்சம் ரூ.50000/- முன் விடுவிப்பு மானியமாக விடுவிக்கப்படும்,
இத்திட்டம் 12 ஆதிதிராவிட மகளிருக்கு குறையாமல் உறுப்பினர்கள் கொண்ட சுய உதவி குழுக்கள் மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து தரம் பிரிக்கப்பட்டிருந்தால் தொழில் தொடங்க பொருளாதார கடனுதவி திட்டத் தொகையில் 50% (அ) அதிகபட்சம் ரூ.600000/- முன் விடுவிப்பு மானியம் விடுவிக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். துரித மின் இணைப்பு திட்டத்தின்கீழ் பயனாளி பங்குத்தொகை 10 சதவீதமும் , 90 சதவீதம் மானியம் சேர்த்து ஆக மொத்தம் 100 சதவீதம் வழங்கப்படும்.
மேற்கண்ட திட்டங்களில் விண்ணப்பிக்க இணையதள முகவரி www.newscheme.tahdco.com
ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின படித்த மாணாக்கர்களுக்கு மாவட்டளவில் வழங்கிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை ஒருங்கிணைத்து மாநில அளவில் பல்வேறு வகையான திறன் பயிற்சிகளை பயில்வதற்கு விடுதி, உணவு மற்றும் பயிற்சி கட்டணங்களை தாட்கோ மூலம் வழங்கப்பட்டு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகளை வழங்கி வருகிறது.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான ரூ.3.00 இலட்சத்திற்குள்ளாகவும், 18 முதல் 55 வயதுக்குட்பட்டும் இருக்க வேண்டும். மேலும். கூடுதல் விபரம் மற்றும் விண்ணப்பிக்க www.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியை அணுகவும்
அலுவலக முகவரி
மாவட்ட மேலாளர்,
தாட்கோ அலுவலகம்,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்
தொலைபேசி எண் : 04329 -228315