மூடுக

முன்னாள் படைவீரர் நல அலுவலகம்

துறையின் பெயர் & முகவரி

மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்துறை வளாகத்தில் அறை எண்.17 -18ல் இயங்கிவருகிறது. இவ்வலுவலகம் மாவட்ட முப்படைவீரர் வாரியம் என்றும் அழைக்கப்படும். இம்முப்படைவீரர் வாரியத்திற்கு உதவி இயக்குநர் செயலாளராகவும், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முதுநிலை படை அலுவலர் ஒருவர் துணை தலைவராகவும், மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராகவும் கொண்டு செயல்பட்டுவருகிறது.

இவ்வலுவலக தொலைபேசி எண்.04329  – 221011, மின்னஞ்சல் முகவரி exwelalr@tn.gov.in ஆகும்.

துறைத் தலைவர் (ம) தொடர்பு எண்கள்
கூடுதல் இயக்குநர்
முன்னாள் படைவீரர் நல  இயக்ககம்
22, ராஜா முத்தையா சாலை,
சென்னை – 600003.
தொலைபேசி எண் 044-2669134

நோக்கம்
முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோர் நலம் பேணும் மறுவாழ்வுத் திட்டங்கள் / சுயதொழில் வேலைவாய்ப்புகள் / நிதி உதவிகள் / மானியங்கள் மற்றும் பல்வேறு பணப்பயன்கள் வழங்கப்படுகின்றன.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வெளிவரும் முன்னாள் படைவீரர்களுக்காக இவ்வலுவலகத்தின் மூலம் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவும் செயல்படுகிறது. இதன்மூலம் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஏற்படும் காலியிடங்களில் முன்னாள் படைவீரர்களின் பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்படுகிறது.

போர் விதவை / போரில் ஊனமுற்றோர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு ஆகியன எண்.22, ராஜா முத்தையா சாலை,சென்னை-03 ல் உள்ள இத்துறை தலைமை அலுவலகத்தின் ஆணைகள் / அறிவுரைகளின்படி செயல்படுத்தப்படுகிறது.

மின் ஆளூமை திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர் குறித்தான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, விவரங்கள் exwel.tn.gov.in என்ற இணைய வழி ஒருங்கிணைக்கப்பட்டுவருகிறது.

அரியலூர்  மாவட்டத்தில் கீழ்கண்ட எண்ணிக்கையில் முன்னாள் படைவீரர் / விதவையர்கள் வசிக்கின்றனர்.

வ.எண் விவரங்கள் தகவல்கள்
01 முன்னாள் படைவீரர் 1055
02 விதவையர் 284
03 போர் விதவையர் 02
04 போரில் ஊனமுற்றோர் 01

நிர்வாக அமைப்பு

Organisation Setup

நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்களின் பட்டியல் (on 26.08.2022)
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ல் படை வீரர் கொடி நாள் கொண்டாடப்படுகிறது.

முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோர் நலம் பேணும் மறுவாழ்வுத் திட்டங்கள் / சுயதொழில் வேலைவாய்ப்புகள் / நிதி உதவிகள் / மானியங்கள் மற்றும் பல்வேறு பணப்பயன்கள் வழங்கிட   படை வீரர் கொடி நாள்  வசூல் செய்யப்படுகிறது

அரியலூர் மாவட்டத்திற்கு 2021-ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  நிர்ணயித்த இலக்கு ரூ.50,30,000/-