தாட்கோ
ஆதிதிராவிடர்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்துடன் 1974ஆம் ஆண்டு தொழில் நிறுவனச்சட்டம் -1956ன் கீழ: தாட்கோ பதிவு செய்யப்பட்டது.
திட்டங்கள்
- நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத்திட்டம் :
ஆதிதிராவிட மக்களின் நில உடைமை மற்றும் நில மேம்பாட்டு ஆதாரங்களை உறுதி செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. - தொழில் முனைவோர் திட்டம் (சிறப்பு திட்டம்) :
பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைப்பதற்கு 30% மான்யத்துடன் கூடிய வங்கி கடன் திட்டம். - தொழில் முனைவோர் திட்டம் :
ஆதிதிராவிட மக்களை தொழில் முனைவோராக உயர்த்திட 18 முதல் 65 வயதிற்குட்பட்ட வேலையற்ற புதிய தொழில் முனைவோருக்கான பொருளாதார கடனுதவி திட்டம். - இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் :
18 முதல் 45 வயதிற்குட்பட்ட படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்கிட பொருளாதார கடனுதவி திட்டம். - இலவச துரித மின் இணைப்பு திட்டம் :
ஆழ்துளை கிணறு , கிணறு உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கிட ரூ.75,000- வழங்கப்படுகிறது. - சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் :
ஆதிதிராவிட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர் வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களை செய்வதற்கு திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது 2.50 இலட்சம் முன் விடுவிப்பு மான்யமாக வழங்கப்படுகிறது. - திறன் மேம்பாட்டு பயிற்சிகள் :
வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய, ஆரம்ப நிலை பயிற்சிகளான ஆயத்த ஆடை தயாரித்தல், கணினி பயிற்சி (டேலி), சில்லரை செலவின மேலாண்மை, கணினி வன்பொருள் உதவியாளர்.வெல்டர். வீட்டு பயன்பாட்டு மின் தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. - மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம் :
மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைகள். மாற்றுத்திறனாளிகள். 40 வயதிற்கு மேற்பட்ட முதிர் கண்ணிகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு ரூ.20000 பொருளாதார நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலும் தாட்கோ திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள, இங்கே சொடுக்கவும்.
அலுவலக முகவரி
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்
தொலைபேசி எண் : 04329 -228315