மூடுக

திட்டங்கள்

வகை வாரியாக திட்டங்களை பட்டியலிடு

வடிகட்டு

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித்திட்டம்

ஆதிதிராவிட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொடர் வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களை செய்வதற்கு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதி ஆதிதிராவிட மகளிர் குழு உறுப்பினர்கள் 18 முதல் 65 வயதுடையவர்களாகவும், குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 12 முதல் 20 வரை இருக்கவேண்டும் குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சம் வரை இருக்கலாம். தேவையான ஆவணங்கள் சாதிச்சான்று,வருமானச்சான்று,பிறப்பிடச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி (GSTIN. எண்), திட்ட அறிக்கை தர மதிப்பீட்டுச்சான்று மற்றும் புகைப்படம்

வெளியிடப்பட்ட தேதி: 16/03/2020
விவரங்களை பார்க்க

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம்

(அ) படித்த வேலையற்ற இளைஞர்கள் தங்களுக்கு தெரிந்த விருப்பமான தொழிலினை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதி 18 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆதிதிராவிட இளைஞராகவும், மத்திய அல்லது மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும். தாட்கோ மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு 25 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும். தேவையான ஆவணங்கள் சாதிச்சான்று,வருமானச்சான்று(ஒரு இலட்சத்திற்குள்),பிறப்பிடச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி (GSTIN. எண்), திட்ட அறிக்கை, புகைப்படம் வாகன கடனுக்கு ஓட்டுநர் உரிம்ம் மற்றும் பேட்ஜ். இத்திட்டத்தின் கீழ் 2017-18ஆம் ஆண்டு முதல் டிசம்பர் – 2019ஆம் ஆண்டு வரை 48…

வெளியிடப்பட்ட தேதி: 16/03/2020
விவரங்களை பார்க்க

தொழில் முனைவோர் திட்டம் – சிறப்புத்திட்டம்

(அ) பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் தொடங்குவதற்காக செயல்படுத்தப்படுகிறது. தகுதி எண்ணெய் நிறுவனத்தால் அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படும் வயது வரம்பு, தொழில் சார்ந்த கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள் சாதிச்சான்று, வருமானச்சான்று(ஒரு இலட்சத்திற்குள்), பிறப்பிடச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, திட்ட அறிக்கையுடன் எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட விளம்பரம் மற்றும் புகைப்படம், இத்திட்டத்திற்கான பயனாளி தேர்வு சென்னை, தாட்கோ தலைமையலுவலகம் மூலம் தெரிவு செய்யப்படுகிறது. (ஆ) தொழில் முனைவோர் திட்டம் இந்து ஆதிதிராவிட இன மக்கள் தொழிலாளர் நிலையிலிருந்து தொழில் முனைவோராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு வருவாய் ஈட்டும்…

வெளியிடப்பட்ட தேதி: 16/03/2020
விவரங்களை பார்க்க

நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத்திட்டம்

நோக்கம் ஆதிதிராவிட மக்களின் நில உடைமையை அதிகரிக்கவும் நில வளத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. தகுதி விவசாயத்தைத் தொழிலாக கொண்டவராகவும் மற்றும் இதுவரை தாட்கோ மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது. தேவையான ஆவணங்கள் சாதிச்சான்று,வருமானச்சான்று(ஒரு இலட்சத்திற்குள்),பிறப்பிடச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நிலத்தின் பட்டா / சிட்டா, அடங்கல் / புலப்படம், அ-பதிவேடு, வில்லங்கசான்று, புவியியல் வல்லுநரின் சான்று, விலைப்புள்ளி (GSTIN. எண்), திட்ட அறிக்கை, மற்றும் புகைப்படம்

வெளியிடப்பட்ட தேதி: 09/01/2020
விவரங்களை பார்க்க

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம்

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்னும் மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டத்தினை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஊரக மற்றும் நகா் பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவங்களை உருவாக்கி வேலைவாய்ப்பினை ஏற்படுத்த அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம், கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) மூலம் இத்திட்டத்தினை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது. மற்றும் மாநில அளவில் கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணைய இயக்குநரகம், மாநில கதா் மற்றும் கிராம தொழில் வாரியம் (KVIB) மற்றும் மாவட்ட தொழில்…

வெளியிடப்பட்ட தேதி: 09/01/2020
விவரங்களை பார்க்க

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்

திட்டத்தின் நோக்கம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் 5 கோடி வரையிலான, கடன் உதவியை வங்கிகள் அல்லது மாநிலக் கடனுதவி நிறுவனம் மூலம் பெற்று, தங்களது புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில் நிறுவனங்களை துவங்க வழிவகை செய்தல். தகுதிகள் பொதுப்பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயது வரை. சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினா் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்). பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு அல்லது ஐடிஐ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற்பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். திட்டத்தின் சிறப்பம்சங்கள்…

வெளியிடப்பட்ட தேதி: 09/01/2020
விவரங்களை பார்க்க

வேலையில்லா இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)

திட்டத்தின் நோக்கம் சமுதாயத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 இலட்சம், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு முறையே ரூ.5 இலட்சம் வரையில் வங்கிக்கடன் பெற்று தொழில் துவங்க வழிவகை செய்தல். தகுதிகள் பொதுப்பிரிவினருக்கு 18 வயது முதல் 35 வயது வரை. சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினா் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்). 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டத்தின் சிறப்பம்சங்கள்…

வெளியிடப்பட்ட தேதி: 09/01/2020
விவரங்களை பார்க்க