மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 05 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை திறந்து வைத்தார்கள். அரியலூர் ஊராட்சி ஓன்றியம், கடுகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சமுதாய நல மையத்தில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து குத்து விளக்கேற்றி வைத்து, சேவை மையத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 110KB)
